படத்திற்கு எழுதிய கவிதை கவிஞர் இரா இரவி

படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !

என்ன சாதி என்ன மதம்
எதுவும் தெரியாது
நானும் நீயும் நண்பர்கள் !

கள்ளம் கபடம் அறியாத
குழந்தைகள் மலரும் நினைவுகளை
மலர்வித்தனர் !

காலில் காலணி இல்லை
வறுமை வாட்டியபோதும்
பஞ்சமில்லை மகிழ்ச்சிக்கு !

வறுமையிலும் செம்மை
வனப்பான புன்னகை
இருவரிடமும் !

திரும்பி வராது
குதூகலமான
குழந்தைப் பருவம் !

ஓடி விளையாடு பாப்பா
பாரதி வரிகளுக்கு
செயல் வடிவம் !

எங்களுக்கு சிரிப்பா வருது
அரசியல்வாதிகளை
நினைத்தால் !

வருங்கால கலாமும்
வருங்கால கல்பனா சாவுலாவும்
வருகின்றனர் அரசுப்பள்ளிக்கு !

கவலையா
அப்படினா என்ன ?
கேட்கும் குழந்தைகள் !

இணைந்த கரங்கள்
அடையும் சிகரங்கள்
சாதிக்கும் தங்கங்கள் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-Apr-16, 8:01 pm)
பார்வை : 118

மேலே