தினம் ஒரு தத்துவ பாட்டு - 12 =113

இந்த வாழ்க்கை யாருக்கும் சொந்தமில்லடா
இன்ப வாழ்வு எப்பவும் நிலையில்லைடா……
ஏழை என்றாலே எலக்காரம் தானடா….!
அவனென்ன புளித்துப்போன பலகாரமாடா... ?

காசுப் பணம் இருந்தா ஆளை மதிக்கும் உலகம்
கையில் காசு கறைஞ்சா தூர தானே விலகும் !
புகழ் இருக்கும் வரைக்கும் போற்றி போற்றிப் புகழும்
புகழ் குன்றிப்போனா தூற்றி தூற்றி இகழும் !

லஞ்சம் வாங்கி வாங்கிப் பழகிப்போன தேசம்
அஞ்சாமல் நம்மை பாழும் குழியில் தள்ளும்
ஏழை வயிறெரிஞ்சி கொடுக்கிற லஞ்சம்
அன்றவன் வீட்டூல சாப்பாட்டுக்கே பஞ்சம் !

நாட்டரசன் கோட்டைக்கட்டி வாழ நெனச்சோம்
நாறிப்போன வாழ்க்கைதான் நமக்கு மிச்சம் !
கல்லறைக்குப் போனாலும் சில்லரைதான்
சில்லரை இறைக்கலனா நமக்கும் கல்லறைதான் !

ஆறடி எடத்துல இப்போ மூணடிதான் மிச்சம்
இனிவரும் காலத்துல மிஞ்சுமா சொச்சம் ?
தங்கி இருக்கும் எடத்துக்கும் வந்தது பங்கம்
வங்கி கடன் கட்டலன்னு செஞ்சது அசிங்கம் !

எல்லோருக்கும் ஓர் நாள் சாவுதான் !-அது
வரும்வரைக்கும் உடல் முழுக்க நோவுதான் !
மருத்துவரை பார்க்காமல் நம் வாழ்வுதான்
முடியுமா நீ சொல்லு பார்க்கலாம் ?

எழுதியவர் : சாய்மாறன் (23-May-16, 6:18 pm)
பார்வை : 103

மேலே