அந்தோ பரிதாபம்...

அந்தோ பரிதாபம்

நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...

வேண்டாததை வேண்டி நான் ஒரு புறமிருக்க,
எனக்குத் தராமல், என்னருகே வீசுகிராயே ஒ மானிடா.

நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...

நான் பிறந்த பொழுது அழகாகத் தான் இருந்தேன்,
மாநகராட்சியும், இந்த மானிடர்களும் எனை அழுக்காக்கி விட்டனரே.

நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...


நான் அழுக்கானாலும், அழுக்கினை அகற்றி, ஊரை அழகாக்கத்தானே நான் பிறந்தேன்,
எனை உபயோகிக்காமல், எனைச் சுற்றி அழுக்காக்குகிராயே ஒ மானிடா.

நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...


குப்பைக்கு ஏங்கி, ஒரு குப்பைத் தொட்டியின் ஏக்கப் பாடல் கேட்கிறதா ஒ மானிடா?
குப்பையை அகற்றி, சுற்றத்தை சுகாதாரமாக்க, சுதாரிக்க கோரும் குரல் கேட்கிறதா ஒ மாநகராட்சியே?

நினைந்து நினைந்து நெஞ்சம் பொருக்கு தில்லையே,
இந்த நிலை கெட்ட மானிடரை நினைந்து நெஞ்சம் பொறுக்குதில்லையே...

சுதாரித்து, சுற்றத்தை காப்போம், சுகாதாரத்தை காப்போம், சுகமான வாழ்வினை சுகித்திடுவோம், ஒ மானிடா.

எழுதியவர் : நட்புடன் (21-Jun-11, 9:48 pm)
சேர்த்தது : நட்புடன்
பார்வை : 381

மேலே