சிறகுடைந்த உயிர்களின் கதறல்கள்

முள்ளிவாய்க்கால்
அள்ளி எறியப்பட்ட
உயிர்களின்
உணர்வுகள்

இரத்தங்கள் ஊற்றெடுத்து
ஓட
மனம் பாட்டெழுதி
வாடுதையா இன்று

பச்சை மரமும்
இவன்
செய்த இச்சையால்
சிவப்பாய் மாறியதய்யா


மரணிக்க துடிக்காத
உயிர்
பட பட என
துடித்து மடிந்ததய்யா


உறவுகள் இல்லை
உறவாட
ஊனமாய் உள்ளது
உள்ளம்
சிலர் செய்த
துரோகத்தில்

கதைபேச குரல் கூட
இல்லை
குரங்காய் தாவித்திரிய
காலும் இல்லை
காலுக்கும் காலம்
வந்து இறந்துவிட்டது உணராத
ஓர்பக்கத்தில்

ஒதுங்கிக் கிடக்கின்றன
ஓடி விளையாடிய
மழலைகளின் மார்புகள்
சிதைந்து

முள்ளி வாய்க்கால்
தள்ளி வதைத்ததே
துள்ளி விளையாடிய
தூய்மையான மனிதர்களின்
உயிர்களைக் கொண்டு



பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (10-Jun-16, 6:45 pm)
பார்வை : 67

மேலே