10 செகண்ட் கதைகள் - ஆயுதம்

" மனைவி : அத்தான்.... சிவன் - பார்வதி உள்ள புகைப் படத்தில், சிவனின் கையில் திரிசூலம் உள்ளது,
விஷ்ணு- லக்ஷ்மி உள்ள புகைப் படத்தில், விஷ்ணுவின் கையில் சக்கரம் உள்ளது,
ராமர் சீதை உள்ள புகைப் படத்தில் ராமரின் கையில் வில் உள்ளது.
ஆனால் கிருஷ்ணன் ராதை உள்ள படத்தில் புல்லாங்குழல் உள்ளது, ஏன்? என்றாள்.
கணவன் : அன்பே.. நீ குறிப்பிட்ட முதல் மூன்று தெய்வங்களும் மனைவிகளுடன் இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆயுதத்துடன் இருக்கிறார்கள். கிருஷ்ணர் காதலியுடன் இருக்கிறார் எனவே ஆயுதம் தேவை படவில்லை. இதன் மூலம் தெரிய வரும் கருத்து என்னவென்றால், தெய்வமே ஆனாலும் மனைவியுடன் இருக்கும் போது பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்.

எழுதியவர் : செல்வமணி (18-Jun-16, 7:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 376

மேலே