அவளும் நானும்
எப்படி இருப்போம்... நானும் அவளும்.....
அதிகாலை துயிலெழுப்ப
தேநீரும் தேனிதழ் முத்தங்களுமாய்....
செய்திதாளுக்காய் சிறு சண்டையும்
சண்டை முடிக்க பெரிய சமாதானமுமாய்....
சமையலறையின் சங்கீதங்கள்
இருவரும் ரசிப்பதற்காய் ......
அலுவலகம் செல்லும் முன்
அவசர முத்தங்கள்....
அழகாய்.....
அவசர செய்திகள் ஏதும் இன்றியும்...
அலைபேசிகள் எப்போதும் ஓய்வறியாமல்...
இருவரில் ..
யார் அழ நேர்ந்த போதும்
விழிகள் அறியும் முன்
துடைக்கிற விரல்களாய்....
இரவு உணவின் போது ..
கொஞ்சம் இன்பமும்...
நிறைய நினைவுகளுமாய்....
எல்லாம் மறந்த
ஏகாந்த நிலையில் ...
அர்த்தஜாமங்கள் '
அர்த்தமானதாய்...
இப்படி தான் இருப்போம்
நானும் அவளும் .......
அவள் எங்கே?..........................