என் அன்னை

மழையில் நனைந்த மகனுக்காய்
மழையை திட்டும்
அன்னை அல்ல அவள் ...
நிச்சயமாய்.....
அவளுக்கு தெரியும்...
மழையும் நானும் தோழர்கள் என...
அவளுக்கு புரியும்...
குடைகள் எனக்கு பழக்கமில்லை என....
மதிப்பெண்கள் பெரிதில்லை அவளுக்கு...
மதிப்பு தான் பெரிது....
என் தோல்விகளை
அவள் பெரிதுபடுத்தியதும் இல்லை...
என் வெற்றிகளை
அவள் விமர்சிப்பதும் இல்லை...
அன்னையாய் இருப்பதில்
அவள் ஒரு இலக்கணம் ....
என சொல்வதில்...
எப்போதும் எனக்குண்டு தலைக்கனம் .......