நேற்று , இன்று , நாளை ,,,,,,,

நேற்று
கவி எழுத முயன்றேன்
முயன்று தோற்கிறேன்
தலைப்பு மட்டும் வரைந்து விட்டேன்
களவாடிய பொழுதுகள் ,,,,

இன்று
நிச்சயம் முடித்து விடுவேன்
என்றே விடிகிறது

காலை கனவுகள்
முடிந்து
களிப்புடன் எழுத
அமர்கிறேன் ,,,

என்னவளே !

தொடக்கம் சரியோ ,,,,
யோசனையில் கழிய
குழப்ப களத்தில்
சண்டையிட்டு கொள்கின்றன
உந்தன் நினைவலைகள் ,,,,,,,

நேரம் கடக்க
நாளை
என்றொரு நாள்
கண்முன் விரிகிறது

முயன்று முடித்து விடுவேன்
சொல்லி கொள்கிறது
விடலை மனசு ,,,,!

எழுதியவர் : தங்கதுரை (3-Jul-16, 6:27 pm)
பார்வை : 223

சிறந்த கவிதைகள்

மேலே