மாலைக்கல்லூரி ஏன் வந்தது தெரியுமா

ஒருமுறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து, தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், தான் கேட்ட
physics major இல் சீட் கிடைக்க வில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டாளாம்.

காமராஜர் சம்பந்தப் பட்டவர்களை கூப்பிட்டு கேட்க,
கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்குத் தான் lab வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணைச்சேர்க்க இயலாது என்று சொல்ல,

காமராஜர்,
"உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள் ?" என்று கேட்டாராம்.

அந்த முதல்வர் "நாலு பேருக்கு " என்று சொல்ல,
இன்னும் 4 பேர் வந்தால் என்ன பெரிய பாத்திரங்கள் இருக்கிறதா" என்று கேட்டாராம்.

அதற்கு அந்த முதல்வர்,
."இல்லை; ஒரு முறை சாதம் செய்து விட்டு, இரண்டாம் முறையும் செய்வேன்" என்று சொன்னாராம்.
.
அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக் கூடாது.
3.30 க்கு காலேஜ் முடிந்ததும்,
இன்னும்
12 பேருக்கு காலேஜ் வைத்து,
அதே lab ஐ யூஸ் பண்ணலாமே என்று சொல்ல,

அப்படி பிறந்தது தான் மாலை கல்லூரி.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (19-Aug-16, 7:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 286

மேலே