நிஜமாய் நீ ஆனால்............
துன்பம் வரும் வேளையிலே
தூயவளே உன்னை நினைத்தால்
தூரப் போனதடி !
இன்பமான தருணங்களில்
இனியவளே நீ வந்தால்
இருமடங்கு பெருகுதடி !
தோல்வி அடையும் போது
தோழியே நீ வந்தால்
தூசு போல ஆனதடி !
வெற்றி பெறும்போது
வெண்பூவே நீ வந்தால்
வானம் சிறியது ஆனதடி !
கனவில் தோன்றிய என்
கற்பனையே ! நிஜமாய் நீ ஆனால்
நிழலாய் உன்னை தொடர்வேன் ..............

