இது சாப்பாட்டு தத்துவம்

🌺💐🌺💐🌺💐🌺
"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !
🌺💐🌺💐🌺💐🌺
# ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
🌺💐🌺💐🌺💐🌺
# லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!
🌺💐🌺💐🌺💐🌺
# சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
🌺💐🌺💐🌺💐🌺
வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!
🌺💐🌺💐🌺💐🌺
# பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
🌺💐🌺💐🌺💐🌺
# கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!
🌺💐🌺💐🌺💐🌺
#தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.
🌺💐🌺💐🌺💐🌺
#தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!
🌺💐🌺💐🌺💐🌺
#வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது...
வெந்தபின் தான் தெரியும்...
🌺💐🌺💐🌺💐🌺
# வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...
நட்பு என்ற சட்னி வேண்டும்..
🌺💐🌺💐🌺💐

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (26-Aug-16, 9:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 326

மேலே