விலகி போகாதே

நினைவில் வந்தாய்
நித்திரையை இழந்தேன்.

உயிரில் கலந்தாய்
உணா்வை இழந்தேன்.

சிரித்துப் பேசினாய்
சினத்தை இழந்தேன்.

தள்ளிச் சென்றாய்
தனிமையை உணா்ந்தேன்.

நாடி வந்தவன் நானடி..
நழுவிச் செல்லாதே!

தாயை இழந்து விட்டேன் ஒருமுறை!
இழக்க இதயமில்லை மறுமுறை!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (27-Aug-16, 12:01 pm)
Tanglish : vilaki pogaathae
பார்வை : 699

மேலே