அரசின் சலுகைகள் ஏழைகளுக்கு இல்லை, ஆளுங்கட்சி தொண்டர்களுக்கு மட்டுமே
ஆளுங்கட்சி தொண்டர்களுக்கு
மட்டுமே ரகசிய அழைப்பு,
அதனால் விநியோகம்
அரசு முத்திரையில்
கோடிக்கணக்கான பொருட்கள்,
இலவசமாக.
ஏழைகள் எதிர்பார்க்கும்
அரசின் நிவாரணங்கள்,
ஆனால் அறிவிப்புக்களோ
வெற்று விளம்பரங்கள்
எறிந்த கல்லை
மொய்த்த மீன்கள்..
ஏமாந்து சென்றன...
இன்னொரு கல் விழுந்த
திசையை நோக்கி!