மணல் கோட்டை
அந்தி சாயும் நேரம்..
அலைகள் வருடிச் செல்லும்
அழகிய கடற்கரையில்
அவனும் நானும்...
மணலாடினோம்..
மகிழ்ந்தாடினோம்..
மனக் கோட்டைகளை
மணல் கோட்டைகளாக்கி..
பெரியதோர் அலைவந்தால்
கரைந்திடும் என்றாலும்
இருளும் வரையே இந்த
ஆட்டம் என்றபோதும்
மணலாடினோம்.....
மகிழ்ந்தாடினோம்...