யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்

பிரச்சினைகள் தீர
*பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம் செய்யுங்கள்.விவகாரம்
செய்யாதீர்கள்.
*விளக்கம் பெறுங்கள்.

விரோதம் பெறாதீர்கள்.
*பரிசீலனை செய்யுங்கள்.

பணிந்து போகாதீர்கள்.
*சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.
*எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
*தானாய்த்தான் முடியுமென்றால்
வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்.
யார் இல்லையென்றால் என்ன?

எண்ணியதை அடையுங்கள்.

எழுதியவர் : செல்வமணி (1-Oct-16, 12:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 265

சிறந்த கட்டுரைகள்

மேலே