தினமணி கவிதைமணி தந்த தலைப்பு

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !




ஜன்னல் நிலவு ! கவிஞர் இரா .இரவி !


அமாவாசையன்றும் தோன்றும் ஜன்னல் நிலவு
அந்த எதிர் விட்டு நிலவிற்கு விடுப்பே இல்லை !

சூரியன் ஒளியை வானத்து நிலா பிரதிபலிக்கும்
சுந்தரியின் ஒளியை சுந்தரன் பிரதிபலிக்கின்றேன் !


வானத்து நிலாவால் அல்லி மலர் மலரும்
வஞ்சி என்ற நிலாவால் நான் மலர்கிறேன் !


வானத்து நிலவோ தினமும் ஒரு வடிவம்
வஞ்சி அவளோ தினமும் ஒரே வடிவம் !


இரவில் மட்டுமே தெரியும் வான் நிலா
பகலிலும் இரவிலும் தெரியும் நிலா அவள் !

முழு நிலவாய் என்றும் அழகாய் ஒளிர்பவள்
முகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி அவள் !


ஒரே ஒரு பார்வைதான் ஜன்னல் வழியே
ஒரு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும் !


இதழ்கள் அசைத்து எதுவும் பேசாவிட்டாலும்
விழி வழி அனைத்தும் பேசி விடுகிறாள் கள்ளி !


சில நிமிட தரிசனம் கிடைக்காது போனால்
சிந்தை அது பற்றியே நினைத்து சோகமடையும் !


சிக்கி முக்கி கற்கள் உரசினாள் தீ வரும்
செல்வியின் பார்வை உரசினாள் காதல் வளரும் !

மகிழ்ச்சியாக பார்வைக் கணை வீசினால்
மனசு மகிழ்ச்சியில் பொங்கி வழியும் !


விடுமுறையின்றி தினமும் வரும் ஜன்னல் நிலவு
வன்முறையின்றி என்னை வாழ வைக்கும் நிலவு !
--

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Oct-16, 10:28 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 197

மேலே