வறட்டு கௌரவம்
மனதிற்கு பிடித்தவனோடு வாழ
மகள் சென்று விட்டாள்.
மன்னித்து ஏற்றுக் கொள்ள
மனம் துடித்தாலும்,
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ? - என்றே
மானம் தடுக்கிறது.
பாசத்தால் பெற்ற மகளை
பார்க்க நினைத்தாலும்
பாதையைத் தடுக்கிறது
பாழாய் போன வறட்டு கௌரவம்....