காதலால் கசிந்துருகி
கோபம் வந்தால்,
திட்டித் தீர்க்க வேண்டும்,
தாபம் கொண்டால்,
முத்தத்தால் மூழ்கடிக்க வேண்டும்,
ஆசை வந்தால்.
அணைத்தே ஆள வேண்டும்,
அன்புக் கொண்டால்,
கொஞ்சியேக் கொட்ட வேண்டும்,
என்றே எண்ணுகிறேன்.
எண்ணியதைச் செய்ய,
எண்ணும்போது எல்லாம்,
கண்ணில் திரையாய்.
கண்ணீர் மறைக்கிறதே!