நம் நட்பு
உறவுகளில் எல்லாம் சிறந்த உறவு
எதுவென்றால் நட்பு தான்..
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
ஒன்றாகி போனோமே..
உன் விருப்பம் என் விருப்பம் எல்லாம் நம் விருப்பமாகி போனதே...
உன் சந்தோஷம் உன் கண்ணீர்
எல்லாம் எனக்கும்
சொந்தமானதே..
நான் துவண்டு போகும்
நேரமெல்லாம் எனக்காக
தோள் கொடுத்தாய்..
எதிர்பார்ப்புகள் எல்லாம் நம்மிடம் தோற்று போனதே நாம் எதிர்பார்த்தது நம் நட்பை மட்டுமே..
நாம் பேசிடும் நேரம் குறைவே ஆனாலும் பேசா வார்த்தைகளையும் புரிந்து கொண்டோம்..
சில நேரங்களில் நமக்கு மௌனமே
மொழியாய் போனதே..
சின்ன சின்ன ஏமாற்றங்கள் பொய் கோபங்கள் அனைத்தையும் ரசித்தோம் நம் நட்புக்குள்..
காலம் நம்மை பிரிக்கவில்லை பிரித்தாலும் நம் நட்புக்குள் எந்த மாற்றமும் இல்லை..
முடிவுகளற்ற எல்லைகளற்ற பாதயை நோக்கி பயணிக்கிறோம்..
நம் நட்பு எப்போதும் புதிதாய் பிறந்த அந்த மழலையின் சிரிப்பை போல கள்ளம் கபடமற்றதாய் இருக்கும்..
காலம் நேரம் தாண்டியும் நம் நட்பின் நினைவுகள் நம் மனதில்
பசுமையாய் பதிந்திருக்கும்..