அனிச்சை

தீக்குச்சியிலிருந்து
வெளிச்சக்கீற்று பிறவாது இருந்திருந்தால்
அறை தான்
இருளில் இருந்திருந்ததை
அறியாது இருந்திருக்கும்..!!
பார்க்க நானும்
இல்லாது இருந்திருப்பின்
அறை தான்
இருந்ததே உணராது இருந்திருக்கும்..!!
இப்போது அறையும் இருந்தது..
அறையில் இருட்டும் இருந்தது..
நானும் இருந்தேன்,
நினைவுகள் வாழும் இவ்வறையில்..!!

எழுதியவர் : கல்கிஷ் (12-Dec-16, 11:11 am)
பார்வை : 74

மேலே