எழுதுனா தூங்கிடுவேன் தம்பி

நான்:- அண்ணா நல்லாத் தானே படிக்கிறீங்க. அப்புறம்
ஏன் அண்ணே இவ்ளோ அரியர்ஸ் வச்சிருக்கீங்க??.

பிரதர்:- எழுதுனா தூங்கிடுவேன் தம்பி. அதான்.

நான்:- எழுதுற தேர்வுகளில் எழுதுனா நீங்க தூங்கிடுவீங்க. அதனால் பெயில் ஆயிடுறீங்க.
செய்முறை தேர்வில் ஏன் பெயில் ஆயிடுறீங்க??

பிரதர்:- அதான் சொன்னேன்ல தம்பி, எழுதுனா தூங்கிடுவேன்னு...

நான்:- செய்முறைத் தேர்வில் செய்து காட்டினாலே பாஸ்தானே அண்ணா.

பிரதர்:- செய்முறை தேர்வில் செய்து காட்டுவதற்கு முன்னால் ரிக்கார்ட் நோட்டு எழுதி சப்மிட் பண்ணனும்.
நான் தான் எழுதுனா தூங்கிடுவேனே.
அதான் ரிக்கார்ட் சப்மிட் பண்ணல. அதனால், செய்து காட்ட அனுமதி இல்லை.
செய்து காட்டாமல் எப்படி பாஸ் ஆவது??

நான்:- (என்னத்த சொல்ல. எனக்குனு வந்து சேருகிறார்களே) ???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Dec-16, 8:51 am)
பார்வை : 767

சிறந்த நகைச்சுவைகள்

மேலே