உன்னருகே வருகையிலே
உன் ஸ்பரிசம் தரும் வெப்பம்,
மழைக் காலம் போலே நிறையும் என் ஆசை தெப்பம்,
விரல் தீண்டும் தூரத்தில் நீ வந்ததேனோ?
உறைநிலையிலும் உருகும் பனியாய் உணர்வு தந்ததேனோ?
உன் இருவிழி அசைத்து,
ஒருவரிப் பாடல் இசைத்து,
கரை தாண்டும் புயலாய் என் மனம் சிதைத்தாயே,
பின்னும், உனை விலகிச் செல்வேன் என்றெனை நினைத்தாயோ?