பாலகுமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாலகுமார்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  13-Nov-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2014
பார்த்தவர்கள்:  428
புள்ளி:  164

என் படைப்புகள்
பாலகுமார் செய்திகள்
பாலகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2022 12:17 pm

எம்மொழி வந்தாலும்
செம்மொழித் தமிழ் போல
செழுமை தரும் மொழியுண்டோ?
தமிழ் அல்லாத மொழி கற்பினும்
தமிழ் தந்த தாலாட்டின் களிப்புண்டோ?

கொஞ்சும் தமிழோடு
நெஞ்சில் மகிழ்வோடு
வாழ்த்தி வரவேற்போம்
நற்செய்கை புத்தாண்டை...
(சுபகிருது-சமஸ்கிருதம்)

வழக்கங்களுக்கு வைப்போம் வரைமுறை,
வளமோடு நலமோடு வளரட்டும் தலைமுறை...

எம்மொழிக் கற்றாலும் தொய்வுண்டாம்
தொய்வில்லை
தாய்த்(தமிழ்) மொழி கற்றவர்க்கு

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...!
தமிழினிது பாலகுமார்

மேலும்

பாலகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2022 11:55 am

எம்மொழி வந்தாலும் செம்மொழித் தமிழ் போல செழுமை தரும் மொழியுண்டோ, தமிழ் அல்லாத மொழி கற்பினும் தமிழ் தந்த தாலாட்டின் களிப்புண்டோ, கொஞ்சும் தமிழோடு

நெஞ்சில் மகிழ்வோடு வாழ்த்தி வரவேற்போம் நற்செய்கை (சுபகிருது-சமஸ்கிருதம் ) புத்தாண்டை...

வழக்கங்களுக்கு வைப்போம் வரைமுறை, வளமோடு நலமோடு வளரட்டும் தலைமுறை...

எம்மொழிக் கற்றாலும் தொய்வுண்டாம்

மேலும்

பாலகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2020 11:43 pm

தூக்கத்தில் சிரிக்கிறேனாம், ஏதோ வெற்றுக் கனவென்றார், என் தேவதையின் ஓரப் புன்னகைக்கு நான் கூறும் பதிலென்று அறியாமல்...!

வானத்தை அளக்கிறேனாம், ஏதோ வெற்றுக் கற்பனையென்றார், நிலவும் சூரியனும் சுற்றித் திரியும் இடத்திலே, உன் முகம் மட்டும் காண்பதை அறியாமல்,

தனியே வெட்கப் படுகிறேனாம், ஏதோ வெற்றுப் பூரிப்பென்றார், உன் அருகிலே நான் பேச வார்த்தைகள் வராமல் தத்தளிப்பது அறியாமல்,

நானாக நான் இல்லை, ஏதோ வெற்றுப் பைத்தியமென்றார், என் அனைத்திலும் உன் நினைவுடனே காதலிப்பது அறியாமல்...!

மேலும்

பாலகுமார் - பாலகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2020 11:30 pm

தனிச்சு நிக்கிறேன் , தவியாய் தவிக்கிறேன் , சிரிக்கிறேன் , நடிக்கிறேன், துடிக்கிறேன், துவலுகிறேன் உன் முகம் காணா நேரங்களில்...!

கவனம் சிதறுகிறேன், பலவாறு பதறுகிறேன், அலறுகிறேன் , கதறுகிறேன் , உளறுகிறேன் உனை நினைக்கும் வேளைகளில்...!

இரக்கமில்லா நினைவுகள் கொண்டு உறக்கமில்லா இரவுகள் தருபவளே, என் உயிருடன் உறவாக வருவது எப்போது...!

தூரமில்லா தொலைவினில் நின்று , ஈரமில்லா முத்தங்கள் தருபவளே, உன் இதழ் தொட அனுமதி எப்போது...!

மேலும்

பாலகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2020 11:30 pm

தனிச்சு நிக்கிறேன் , தவியாய் தவிக்கிறேன் , சிரிக்கிறேன் , நடிக்கிறேன், துடிக்கிறேன், துவலுகிறேன் உன் முகம் காணா நேரங்களில்...!

கவனம் சிதறுகிறேன், பலவாறு பதறுகிறேன், அலறுகிறேன் , கதறுகிறேன் , உளறுகிறேன் உனை நினைக்கும் வேளைகளில்...!

இரக்கமில்லா நினைவுகள் கொண்டு உறக்கமில்லா இரவுகள் தருபவளே, என் உயிருடன் உறவாக வருவது எப்போது...!

தூரமில்லா தொலைவினில் நின்று , ஈரமில்லா முத்தங்கள் தருபவளே, உன் இதழ் தொட அனுமதி எப்போது...!

மேலும்

பாலகுமார் - பாலகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2018 1:29 pm

என் கருவிழி ஊடே எனக்கு காதல் காய்ச்சல் தந்தவளே - நீ
நகர்வலம் உலா வரும் நிலவோ, நிழல்தனில் சுகம் தரும் மரமோ, மணம் தர மகிழ்வுறும் மலரோ, இருள் அதில் குளிர் தரும் இரவோ,

உன் அங்கங்கள் அசைவதனைக் கண்டு என் அண்டங்கள் அசைவற்று நிற்பதேனோ...!

சரணமும் பல்லவியும் தேடி, உனதழகு வழி வார்த்தைகள் நாடி, சில வரிகள் எழுத நினைத்தேன் , எனையும் காதல் கவிதை எழுத பணித்தாயே...!

மேலும்

பாலகுமார் - பாலகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2018 11:13 pm

மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!

உடல் நடுக்கத்தை மீறி, தயக்கமாய் என் காதல் கூறி, புன்னகையில் உன் பதில் மாறிய நிமிடங்களை,
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!
வெப்பக் காற்று உமிழ்ந்து, முத்த மழைப் பொழிந்து, இதழ் வழி உயிர் மாற்றிய நேரங்களை ,
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!
மழைக்கால குடையாக, குளிர்கால கதகதப்பாக, உன் மஞ்சத்திலே நீ தந்த தஞ்சத்தை,
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!

மேலும்

நன்றி 03-Mar-2018 6:59 am
நன்றி நட்பே 03-Mar-2018 6:59 am
அருமை... 28-Feb-2018 10:58 pm
கல்வெட்டு எழுத்துகளாய் காலங்கள் கடந்தும் அழியாது நிற்கும் காதல் நினைவுகள் மறக்க நினைத்தால் மரணத்தில்தான் முடியும்... அருமை வாழ்த்துகள் 28-Feb-2018 8:02 am
பாலகுமார் - பாலகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2018 11:13 pm

மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!

உடல் நடுக்கத்தை மீறி, தயக்கமாய் என் காதல் கூறி, புன்னகையில் உன் பதில் மாறிய நிமிடங்களை,
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!
வெப்பக் காற்று உமிழ்ந்து, முத்த மழைப் பொழிந்து, இதழ் வழி உயிர் மாற்றிய நேரங்களை ,
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!
மழைக்கால குடையாக, குளிர்கால கதகதப்பாக, உன் மஞ்சத்திலே நீ தந்த தஞ்சத்தை,
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!

மேலும்

நன்றி 03-Mar-2018 6:59 am
நன்றி நட்பே 03-Mar-2018 6:59 am
அருமை... 28-Feb-2018 10:58 pm
கல்வெட்டு எழுத்துகளாய் காலங்கள் கடந்தும் அழியாது நிற்கும் காதல் நினைவுகள் மறக்க நினைத்தால் மரணத்தில்தான் முடியும்... அருமை வாழ்த்துகள் 28-Feb-2018 8:02 am
பாலகுமார் - பாலகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2018 10:07 am

உனது அருகினில் வர என் உடலெல்லாம் கூசுதே,
கருவிழி அசைவுகள் எனை நிலவினில் வீசுதே,
ஒரு தலையாய் ஓரம் நின்று உனைக் காதல் செய்யும் போது,
என் இதயமும் மூளையும் அனுப்புதடி ஓராயிரம் தூது...
உன்னோடு பேச வார்த்தை கொடு பெண்ணே -
இல்லை ஏதும் பதில் வேண்டி கேள்வி தொடு முன்னே...

மேலும்

நன்றி நட்பே 27-Feb-2018 11:06 pm
ஐயங்கள் நிறைந்த அன்பே மாசற்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2018 8:19 pm
பாலகுமார் - பாலகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2017 9:22 am

என் நித்திரை கொள்ளா இரவுகள் நீள்வதென்ன,
இமைப் பொழுதும் உன் நினைவுகள் எனை ஆள்வதென்ன...
இயற்கையின் உவமைகளாய் வந்தாய்,
உயிருக்குள் உமையாளாய் நின்றாய்,
உன் காதல் சிறையில் தப்பிக்க தோன்ற வில்லை -அடியே
என் இதய அறையில் உனக்கன்றி வேறு இடம் இல்லை...!

மேலும்

பாலகுமார் - பாலகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2016 12:46 pm

உன் ஸ்பரிசம் தரும் வெப்பம்,
மழைக் காலம் போலே நிறையும் என் ஆசை தெப்பம்,
விரல் தீண்டும் தூரத்தில் நீ வந்ததேனோ?
உறைநிலையிலும் உருகும் பனியாய் உணர்வு தந்ததேனோ?
உன் இருவிழி அசைத்து,
ஒருவரிப் பாடல் இசைத்து,
கரை தாண்டும் புயலாய் என் மனம் சிதைத்தாயே,
பின்னும், உனை விலகிச் செல்வேன் என்றெனை நினைத்தாயோ?

மேலும்

கருத்துக்கு நன்றி 15-Dec-2016 6:27 pm
ஒவ்வொரு செயலும் எம்மை மதிப்பிடும் மதிப்பெண்கள் பெண் மனதில் 15-Dec-2016 1:40 pm
பாலகுமார் - பாலகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2016 5:32 am

பனி போர்த்தும் காலை நேரம் , ஒளி கொஞ்சம் எட்டிப் பார்க்கும், வரிகளில்லா பாடல்கள் பல பறவைகள் பாட, மேள தாளம் மேடைகள் இன்றி மரக்கிளைகளும் ஆட, விழிதிறக்கும் முன்னே, என் கனவெல்லாம் பெண்ணே, பிரிய மறுத்தாயடி, எந்தன் துயிலும் கெடுத்தாயடி... !

அலைபோலே தொட்டுச் சென்றாய், மழைத்துளியாய் கொட்டித் தீர்த்தாய், உனை தொடர துடிக்குது என் பாதங்கள் வழித்துணையாய், கொஞ்சம் இடறி விழுகிறது என் இதயம் செதில் செதிலாய், என் மனம் மறத்துப் போகும் முன்னே, உன் காதலையும் கொஞ்சம் சொல்லிவிடு கண்ணே...!

மேலும்

சரியே. கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்... 16-Oct-2016 11:19 am
அங்கு பார்வைகள் தான் எல்லாம்.இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2016 9:38 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

விஜய்

விஜய்

கோவை
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
மொழியரசு

மொழியரசு

ராஜபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (26)

இவரை பின்தொடர்பவர்கள் (26)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே