நினைவுகளாய் நீ
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!
உடல் நடுக்கத்தை மீறி, தயக்கமாய் என் காதல் கூறி, புன்னகையில் உன் பதில் மாறிய நிமிடங்களை,
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!
வெப்பக் காற்று உமிழ்ந்து, முத்த மழைப் பொழிந்து, இதழ் வழி உயிர் மாற்றிய நேரங்களை ,
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!
மழைக்கால குடையாக, குளிர்கால கதகதப்பாக, உன் மஞ்சத்திலே நீ தந்த தஞ்சத்தை,
மறந்திட தோணுதடி, வழியறியாமல் இறந்திடவும் ஏங்குதடி...!