வர்தாவாய் வந்ததேனோ

மழையைத்தான் எதிர்பார்த்தோம்
வர்தாவாய் வந்ததேனோ,
வன்சிரமம் தந்ததேனோ?

வான்பொழிய உதவியதை,
நூற்றாண்டு கடந்தததை
வேரோடு சாய்த்ததேனோ?

கண்ணிமைத்த நேரமதில்
கசக்கிப் போட்டாயே
எத்துனைபேர் வாழ்வை!

புண்பட்டுப் பொலிவிழந்தனர்
எந்தன் உடன்பிறப்புகள்,
உந்தன் இரக்கமின்மையால்!

இதுபோதும் இனிவேண்டாம்
ஒருபோதும் சினம்வேண்டாம்
அமைதியாய் இருந்துவிடு!

மானிட சென்மமே
வருடக் கடைசியிது,
வாருங்கள் திருந்திடுவோம்!

அடுத்த சீற்றமதைத்
தடுக்க முயல்வோம்
இயற்கைக்கு இனிதுசெய்தே!

-ரசீன் இக்பால்

எழுதியவர் : ரசீன் இக்பால் (15-Dec-16, 7:59 pm)
பார்வை : 152

புதிய படைப்புகள்

மேலே