அம்மா ஊட்டிய சோறு

உணவில் சுவையேதும் இல்லை
எதுவும் நிறைவாக இல்லை
பசியை உடனே போக்கிடுமே
அம்மா சோற்றினை ஊட்டிவிட்டால்..

வீட்டில் விளக்கேதும் இல்லை
நாளைக்கு வருமானம் இல்லை
நிம்மதி மனதில் வந்திடுமே
அம்மா கவளத்தை தந்துவிட்டால்..

நிலவைக் கொஞ்சம் தொட்டுக்குவோம்
நட்சத்திரம் கடித்து சுவைத்திடுவோம்
வானம் ஊத்தி குடித்திடுவோம்
அம்மா ஊட்டும் பிடிசோறில்..

வந்த பசியும் தங்கிடாது
எந்த பசியும் ஜெயித்திடாது
சொந்தக் கண்ணும் அழுதிடாது
உடலே திடமாய் ஆகிவிடும்

உப்புமா கூட சுவைத்திடுமே
பாகற் காயும் இனித்திடுமே
பழைய சோறும் பஞ்சாமிர்தமே
அம்மா அன்பாய் ஊட்டிவிட்டால்

அன்பால் உள்ளம் குளிர்ந்துவிடும்
வயிறும் முழுதாய் நிறைந்துவிடும்
என்பால் ஆன இவ்வுடம்பு
தெம்பாய் ஆகும் அக்கணமே..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Jan-17, 7:39 am)
Tanglish : amma ootiya soru
பார்வை : 602

மேலே