கனவே நீ கலைந்து போகாதே

அவள் நினைவுதனை உன் இரவால்
உயிர் கொடுக்கிறேன் -கனவே நீ கலைந்து போகாதே

அவள் காதல் நியம் இன்றி போனாலும்
அவள் தந்த காதல் நிழல் தனை
உன் துணை கொண்டு இரவில் சுகம் பெறுகிறேன்
கனவே நீ கலைந்து போகாதே

அவள் தந்த காதல் வலி
பகல் தன்னில் சுமையாகி போனாலும்
இரவு பொழுதில் நீ வந்து விடுவதால்
அந்த சுமையும் இனிமை கொள்கின்றன உன் இரவில்
கனவே நீ கலைந்து போகாதே

எழுதியவர் : கலையடி அகிலன் (12-Jan-17, 10:12 am)
பார்வை : 271

மேலே