ஜல்லிகட்டு காளை

முல்லைக்கு  தேர்  தந்தவன்
தமிழன்
காளைக்கு குரல் கொடுப்பான்
வீரதமிழன்
தமிழன் வீரம் வீழாதிருக்க
தமிழ்காளைகள் மிரளச்செய்வான்..

ஏறுதழுவுதல் உன்னோடு
தடைகளைவோம் தமிழ்
உணர்வோடு
உன்னை பூட்டி வைக்க
வளர்க்கவில்லை
எங்களுக்கு வீரம் ஊட்டி
வளர்க்க ஜல்லிகட்டு..

அடையாளம் அழிக்கும்
அந்நிய சொல் கேளாதே
இந்திய வீரம் காத்த
வீரதமிழன் வரலாறு பார்
கட்பொம்மன் இருந்தால்
பீட்டா நிலைகுலைய
ஓடிஇருக்கும்....

ஏறுதழுவுதல் தமிழன்
விளையாட நோய்கள்
மிரண்டன
தமிழ் மரபு காளை
தமிழ் மண்ணில் ஓட வேண்டும்
மரபணு காளைகள் வேண்டாம்...

எங்கள் காளைகள் கொம்பில்
வீரம் விளையாட
பீட்டா  கொம்புடைக்க முடியுமா
தமிழன் உணர்வால் பீட்டா
தலைஎடுக்க முடியுமா
ஜல்லிகட்டு நீதி கேட்க....

இளைஞர்கள் மீதி சொல்ல
வெற்றி எனும் வெறியோடு
தமிழன் களம் காண
காளைகள் கவனிக்கும்
கனிவோடு
ஜல்லிகட்டுக்கு விடுதலை தர
புல்கட்டு கேட்குமாம்
நம் காளைகள் வீரத்தோடு..

எழுதியவர் : சிவசக்தி (19-Jan-17, 9:07 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 757

மேலே