வேலையில்லாப் பட்டதாரி
 
 
            	    
                கவிதை                              
                                             வேலையில்லா பட்டதாரி !
நான்
அருகே சென்றாலும்
கடல் அலைகள் 
என் பாதங்களை 
முத்தமிடாமல் 
செல்லுகின்றன !
என்
கண்களில் கண்ணீரோ 
வற்றி விட்டது 
என் மனமோ
ரத்தக்கண்ணீர் 
வடிக்கின்றன !
நான்
சென்ற இடமெல்லாம்
வேலை காலியில்லை
போர்டு பேசாமலே 
என்னை
வாசலோடு 
வழி அனுப்புகிறது !
நான் 
படித்த பட்டதாரிதான்
எந்தப் பண்ணையாரும்
எனக்கு 
வேலை கொடுக்க
முன்வரவில்லை !
என் 
ஏங்கிய மனம்
தூங்கிய நினைவுகள்
கனவாக வந்து 
பயமுறுத்துகின்றன !
நான் 
நாள்தோறும் படித்த
நாளேடுகள் எல்லாம்
எனக்காக 
புலம்புகின்றன!
நான் 
பட்டதாரி ஆனவுடன்
வானில் பறந்தேன்
கனவில் மிதந்தேன் !
நான் 
‘வேலையில்லாதவன்’
என்று என் 
தேய்ந்த செருப்பு கூட
என்னை ஏளனமாக
பார்த்து சிரிக்கின்றன !
‘வெட்டி ஆபிசர்’ 
‘தண்டச்சோறு’ 
என எனக்கு 
படிக்காமலே கிடைத்த 
பட்டங்களில்... 
நான் படித்த 
பட்டமே மறந்து விட்டது !
நான்
வாங்கிய பட்டத்திற்கு
வேலையில்லை !
அரசாங்கத்திடமிருந்து
உதவிப்பணம் கிடைத்தது
வேலையில்லா பட்டதாரி
என்ற பட்டம்
எனக்கு 
கிடைத்த பின்பு !
 
                     
	    
                
