கருவறை ஓவியம்

காகித ஒவியம் கரைந்து விடும் என்றெண்ணி,
கருவறையில் வரைந்தேன்,
அழகான ஓவியம் ஒன்றை...!
பத்து மாதமாய் பதமாய் வரைந்த ஓவியத்திற்கு
உயிர் கொடுத்தேன் என் மூச்சு காற்றினால்....!
ஓவியமும் உயிர் பெற்று உருவம் எடுத்தது,
குழந்தை வடிவில்....!
அந்த அழகான ஒவியம் "நீயடி கண்ணே"
இப்படிக்கு,
அம்மா

எழுதியவர் : (10-Feb-17, 7:40 pm)
சேர்த்தது : anisheeba
Tanglish : karuvarai oviyam
பார்வை : 79

மேலே