சல்லிக்கட்டு

வீரமென்றும்
தீரமென்றும்
கூர்விழி மங்கையர் காதலுக்கென்றும் வீரங்கொண்ட இளங்காளையர்
ஏறுதழுவி நின்றனரே!
ஊடலுக்கு பின்படைந்த கூடல் போல
தேடலுக்கு பின்புணர்ந்த காதல் போல
விரட்டு, விரட்டு மஞ்சு விரட்டு என்றனரே!
நெஞ்சு நிறைய ஆர்வங்கொண்டு
மிஞ்சும் காளை திமிலின் கர்வம்கொன்று
அஞ்சி மிரண்ட பிள்ளையை
கொஞ்சி தன்புறஞ்சேர்த்தது போல்
என்றும் 'என் நண்பன் 'நீ
உன் 'அன்பன் 'நானென்று
பலநூறு ஆண்டு நட்பினை
மரபாய் மரபணுவில் ஏற்றி
'கலாச்சாரம் 'என்று கூவி தமிழறம் வளர்த்தனரே!

எழுதியவர் : சாருமதி (5-Mar-17, 5:54 pm)
சேர்த்தது : சாருமதி
பார்வை : 67

மேலே