தண்ணீர்

சொட்டுகிறது தண்ணீர்
தமிழகமே வடிக்கிறது கண்ணீர்
வருங்காலம் பார்க்குமா
குவளையில் நீரை
கொடுக்க மறுக்குது கர்நாடகம்
தண்டிக்க மறுக்குது ஜனநாயகம்
வாய் தண்ணீர் வயிறு நிறைக்குமா
நீர்ப்பாசனமின்றி பயிர் செழிக்குமா
விளை நிலங்களை காலியாக்கினோம்
காலி குடங்களுடன் போராடுகிறோம்
கானல் நீரானது மழை
மரத்தை வெட்டியது நம்பிழை
சொந்தமாய் வீடுண்டா
இனிக் கேட்பாரில்லை
சொந்த ஊரில் மழையுண்டா
என நலம் விசாரிப்போம்
சுருக்குங்கள் தண்ணீர் தேவையை
மறக்காதீர் பொதுநலத்தை
மண்நீரைக் காத்திடவே
தண்ணீராய்க் கலப்போம் வாரீர்

எழுதியவர் : லட்சுமி (22-Mar-17, 5:39 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : thanneer
பார்வை : 2530

மேலே