மிதிபட்ட மலர்

பிறப்பில் பெண் சாபமா
வளர்த்த பெண் சாபமா
உணர்வு அறியா உடல் சாபமா
பூக்கும் முன்னே காய்ந்து போனதே
பள்ளியில் சேர்க்கும் முன்னே
தெருவில் மிதிபட்டு போனாயே
விரல் பட்டாலே காயும் அழகே
கரங்களால் நசுக்கப்பட்ட
கண்ணகியே
பிஞ்சு உடலில் நஞ்சு கழந்து போனதே
இரண்டு கால் மிருகங்களின் பசிக்கு
இரையானாயே
கடவுள் கற்பை உணராதவர்
தெரிந்தால் உனக்கு பெண்மையெனும் சாபம் கொடுத்துருப்பாரா
பெண் ஈன்ற காமுகர்களுக்கு அதிகாரம் அளித்திருப்பாரா
சீதை வம்சத்து பேதையே
- பே.ருத்வின் பித்தன்

எழுதியவர் : ருத்வின் (2-May-17, 4:24 pm)
பார்வை : 314

மேலே