சிந்தனையில் நிந்தனை

மக்கழே! பொதுமொழிச்சொல் ஆனதோ
பொறுக்கிகள்! பொதுவுடைமை ஆனதோ
நமக்குநாமே நாமமென்ற் ஆனதோ - விரும்பிய

கட்டுமரமும் கரைசேர்த்த கதையில்லை
கம்பீர மங்கையும் நிலையில்லை
தலைவனும் போதையில் சிந்தையில்லை - அதன்பால்

காண்பவற் கைக்கொட்டிடும் தருணமிங்கே
களவாண்டவற் அரசமைத்திடும் நேரமிங்கே
வாதி என்றோர் மூடனிங்கே
பிரதிவாதி என்றோர் அரக்கியுமிங்கே
வாக்களித்தேன் என்றோர் தியாகியிங்கே - பிரதமரும்

பிம்பமாகிப்போனதேனோ இன்றைய நிலை
இழப்பீடாய் இயற்கையே உனது விலை
உழைப்பே உழவாளியின் உலை
கருப்பே அரசியல்வியாதியின் கலை - உறைத்திடு

ஏறுதழுவுப் போராட்டமோற் முன்னெச்செறிக்கை
ஏமாற்றுத் தலைமைக்கோற் சாவுமணி
ஏளனம் செய்தோற் எண்ணிபார்க்க
ஏற்றம் கண்டதோற் காவுதனில் - இங்கே

ஞாலத்தின் தலைமைக்கோற் நாதமுண்டு
இசைத்திட எட்டுதிக்குமொற் கூட்டமுண்டு
முறம்கொணற் புலிவிரட்டிட்ட பெண்மையுண்டு
கரிகால்சோழம் வென்றிட்ட ஆண்மையுண்டு
வள்ளுவனோடு வழக்காடும் வாக்குவமையுண்டு - சொல்வோம்

வானூர்திக்கும் ஓட்டி நாங்கள்
வஞ்சித்தோற்க்கு வன்மம் நாங்கள்
எம்குலத்தோர் எதிர்காலம் நாங்கள்

புரட்சிப்போர் புரிந்திட்ட கூட்டமொன்று
அரசின் ஆளுமையினை வென்று - அன்று

சூன்யமிலா தலைமுறை படைப்போம்
சூத்திரமிலா கல்வி கொடுப்போம்
சாதியிலா சமுதாயம் விழிப்புணர்த்திடுவோம்

கட்டுப்பாடிலா சுதந்திரம் ஊட்டுவோம்
கட்டுகோப்பான கலவி கற்பிப்போம்
கவர்ச்சிக் அடிபணியா உணற்வருந்துவோம்
கவழ்சோற் உழைத்து எய்துவோம் - என்றும்

நல்வினை நடப்போம்! ஊழ்வினை ஏற்போம்!
செயற்கை மறுப்போம்! மரம்தனை நடுவோம்!
புவியினை காப்போம்! மனிதம்தனை போற்றுவோம்

எழுதியவர் : சிவக்குமார் ந (6-May-17, 1:16 am)
சேர்த்தது : சிவக்குமார்
பார்வை : 1731

மேலே