முதல் பார்வையிலே
மாலை மயங்கும் நேரம்
இளந் தென்றல் வீச
காற்றோடு கதை பேசும் மரங்களின் நடுவே
கண்களை மூடி நான் அமர்ந்திருந்த வேளை....
ஓர் இளங்காற்று என் கேசத்தை வருட
நற்மணம் நாசியை தீண்ட
உடம்பெல்லாம் சில்லிட்டவனாய்
என் இமை திறக்க....
என்னைக் கடந்து சென்றாள்
பெண்ணவள்....!
அவள் வீசிய ஒற்றைப் பார்வை
என் இதயத்தை தாக்க
காதல் ராணியாக சிம்மாசனம் ஏறினாள்
என் அனுமதியின்றியே......
கன நொடியில் ஏற்பட்ட மாயமோ அறியேன்
முதல் பார்வையிலே
என்னை முழுதாய் ஆட்கொண்டுவிட்டாள்.....
என் காதல் தேவதை...!