உன் காலில் என் நண்பன்
உன் மலர்கால்களை
என் மடியில் வைத்து
அதனருகில் மெல்லச்சென்று
நன்றி சொல்ல வேண்டும்
உன் வருகையை எனக்கறிவிக்கும்
என் நண்பனான கால்கொலுசுகளுக்கு
நீ துயில்கொள்ளும்போதே...
எழுந்தால் என்னை தண்டிக்க
கொலுசுகளை கழற்றிவிடுவாயோ
என்ற ஐயத்தால்...