பாலா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாலா
இடம்:  சென்னை, தமிழ் நாடு, இந்திய
பிறந்த தேதி :  13-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Apr-2017
பார்த்தவர்கள்:  1656
புள்ளி:  142

என்னைப் பற்றி...

தீந்தமிழலை சுவைக்க விரும்பும் மற்றுமோர் தமிழ் தாசன்...

என் படைப்புகள்
பாலா செய்திகள்
பாலா - பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2018 9:29 am

உன்னையும் என் காதலையும்
மட்டுமே கவியாய் வடித்த
என் கரங்கள் ஏற்றது ஓர் சபதம்
வடிக்காது மற்றுமோர் இன்பக்கவி...

எனை பிரிந்து உன்னவரின் கரம்
பற்றியமையால்...

இது பொறாமையாலல்ல
என் காதலியின் இடத்தை
வேறோர் பெண்ணோ
அன்னவரின் மனைவியான நீயும்
நிரப்பமுடியாமையால்...

மேலும்

சோகம் நிறையாத உள்ளங்களை சுடுகாட்டில் கூட கண்டுபிடிக்க முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2018 10:40 am
பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2018 9:29 am

உன்னையும் என் காதலையும்
மட்டுமே கவியாய் வடித்த
என் கரங்கள் ஏற்றது ஓர் சபதம்
வடிக்காது மற்றுமோர் இன்பக்கவி...

எனை பிரிந்து உன்னவரின் கரம்
பற்றியமையால்...

இது பொறாமையாலல்ல
என் காதலியின் இடத்தை
வேறோர் பெண்ணோ
அன்னவரின் மனைவியான நீயும்
நிரப்பமுடியாமையால்...

மேலும்

சோகம் நிறையாத உள்ளங்களை சுடுகாட்டில் கூட கண்டுபிடிக்க முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2018 10:40 am
பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2018 9:21 am

சற்றே பூத்த
மலரும் வெட்கி மறையும்
என்னை கண்ட நிந்தன்
மதியொளி துலங்கும் முகத்தையும்
மதியொளி கண்டு மலரும்
அல்லியாய் எந்தன் ஆசையையும் கண்டபின்...

மேலும்

இதமான காதல் உள்ள வரை இந்த உலகம் செல்லும் இடமெல்லாம் இனிமையானது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2018 10:39 am
பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2018 9:12 am

உனை அடைய நான் புரிந்த
காதல் தவத்திலும் மேன்மையானது
உன் தவம் என்றறிந்தேன்...

நாம் இணைகையில்
எனக்கு முன்னதாக
உன் கருவிழி சிந்திய
ஆனந்தத்தை கண்டு...

மேலும்

ஒரு துளி கண்ணீர் தான் பல சந்தர்ப்பங்களில் வாழ்க்கையை உணர்த்துகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2018 10:36 am
பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2018 1:54 pm

கதிரவனின் கதகதப்பான
கரங்கள் நம்மை அரவணைப்பதால்
மலர்வோம் என்ற நம்பிக்கையில்
பூக்க தயாராயிருக்கும்
மலரின் நம்பிக்கை
அனைத்து உயிர்களும் பெறட்டும்...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும்

எந்த மனிதனின் நெஞ்சுக்குள் சோகம் இல்லை என்று தேடிப்பார்த்தால் தொடக்கமும் முடிவும் நிச்சயம் தோற்றுத்தான் போகும். கனவுகளின் வாழ்க்கை அமைதியாய் நிலைக்கட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jan-2018 1:54 pm
பாலா - பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2017 9:32 am

சொடுக்கு விடும் தருணத்துள்
என்னுள் நுழைந்த உன்னை
வெளியேற்ற யுகங்கள்
பல தேவைப்படும்போலும்...

மேலும்

மரணம் வரை அவள் வாடகையின்றி வாழும் விடு இதயம் தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 12:24 am
நன்றி அன்பரே 17-Aug-2017 9:44 am
அதுதான் அதுதான் காதல் ! யுகமாய் தொடரும் பாடல் ! அழகு ! தொடருங்கள் ! 17-Aug-2017 9:42 am
பாலா - பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2017 9:21 am

செல்வம் பெருக்கினோனுக்கு வாய்க்காத செல்வம்
ஒரு வேளை கூழ் மட்டுமே வாய்க்கப்பெற்ற
ஏழையாக்கப்பட்டவன் தேடிய செல்வம்


நிம்மதியான சிலமணிநேர உறக்கம்...

மேலும்

நன்றி 10-Aug-2017 12:22 pm
நன்று.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Aug-2017 5:58 pm
பாலா - பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2017 2:21 pm

பூவை சுற்றி சுழலும்
அவ்வண்டறியும் சூட்சமம் நான் அறியேனோ?!
பூவிடமிருந்தும் உன்னிடமிருந்து தானாக வருவதில்லை
வண்டு உண்டு வாழ தேவையான தேனும்
நான் ஜீவித்திருக்க உனதன்பும்...

மேலும்

நன்றி நண்பரே 26-Jul-2017 9:12 am
தேனும் அன்பும் இனிப்பானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Jul-2017 5:59 pm
பாலா - பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2017 9:46 am

சருகும் தளிராகி
கல்லும் கனியாகி
நானும் புதுப்பித்தவனாகி
புது பித்தனும் ஆகி நிற்கின்றேன்
மின்னும் அப்பெண்ணின்
கண்ணின் ஒரு துளியால்.

மேலும்

நன்றி தோழரே 21-Jul-2017 10:41 am
வலிகள் என்றும் ரணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jul-2017 10:26 am

மலர்போல் மென்மையாய் இருப்பவள் பெண்
கல் மனம் பெண் மனம் ஆகாது
எப்போதும் அமுத கலசம் தான்
அவள் மனம்
புன் சிரிப்பே அவள் சிரிப்பு
அது ஒரு போதும் பூமியை
அதிர்த்திடாது

மேலும்

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே தமிழ்தாசன் 04-May-2017 4:34 pm
மிக்க நன்றி இதயம் விஜய் 04-May-2017 4:33 pm
மிகையில்லா வர்ணனை... வாழ்த்துக்கள் நண்பரே... 04-May-2017 3:36 pm
மென்மையின் இலக்கம் பெண்மை அதுவே உண்மை... அழகிய கவிதை வாழ்த்துக்கள் நண்பரே...அன்னத்திற்கே 04-May-2017 3:24 pm
பாலா - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2017 1:48 pm

சிறகு முளைக்காத "இதயத்திற்கு" சிறகு முளைப்பதும்
இயல்பாய் இருக்கும் "இதயம்" எம்பி குதிப்பதும்
நினைவு சுமக்காத "இதயம் " நினைவு சுமப்பதும்
வலி உணராத "இதயம்" வலி உணர்வதும்
குருதி வழியா "இதயம்" குருதி வழிவதும்

பாழாய்ப்போன "காதல் " வந்துவிட்டால் மட்டும்
"இதயம் "அது இயல்பு நிலையை மாற்றி(கொல்)க்கொள்கிறது

மேலும்

தங்கள் கருத்தில் மகிழ்வு நன்றி நண்பா 04-May-2017 6:39 pm
இதயமதில் காதல் நுழைந்திட இன்பமும் துன்பமும் கடும் மழையாய்... வாழ்த்துக்கள் நண்பரே 04-May-2017 6:04 pm
பாலா - பூவிதழ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2017 2:12 pm

எங்கள் வாழ்வில் இனியதொரு தருணம்
உங்கள் வருகையோடும் வாழ்த்துகளோடும்
பூக்களோடு வரவேற்கிறோம்
புன்னகையோடு வாருங்கள்
உங்கள் வாழ்த்துமழையில்
வானவில் பூக்கட்டும்
வானிலும் எங்கள் வாழ்விலும்
வாழ்ந்துகாட்டுகிறோம்
வானும் மண்ணும் பயனுற !!

அழைப்பு இதழ்கள்

மேலும்

ஆமாம் நன்றி 09-May-2017 4:40 pm
வரவேற்கும் விதம் அருமையாக இருந்தது... தம்பதியர் சமூகத்திற்கு தர வேண்டிய உறுதிமொழி "வாழ்ந்துகாட்டுகிறோம்"... 04-May-2017 3:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே