அம்மா போய்ட்டு வாறன்

காக்கி ட்ரௌசர்
கழடாம இருக்க பின்னூக்கி
கை கிழிஞ்ச
கசங்கின சட்டை
காலுக்கு செருப்பில்ல
கஞ்சி கூடை கையிலில்ல
மேலுக்கு போட்ட துணி
முச்சூடும் வெள்ளையில்ல
மஞ்ச புஸ்தக பை எடுத்துகிட்டு
மத்தியான சோத்துக்கு.....


கவிஞர் செல்ல இளங்கோ

எழுதியவர் : கவிஞர் செல்ல இளங்கோ (10-Jun-17, 8:23 pm)
பார்வை : 114

மேலே