பாசத்தாய்

காய்ந்து சருகாய் விழுந்தப் போதிலும்
ஓய்ந்து கிடக்கத் துளியும் விரும்பாதவள்
வாய்மை மறந்தப் பெற்றப் பிள்ளைகளிடம்
தாய்மை வாசம் என்றும் மாறாதவள்......


அடுப்பில் எரியும் விறகு போல
தனிமை நெருப்பில் நெஞ்சம் எரிகின்றாள்
இருவிழியில் வீழ்கின்ற நீர்த்துளியில் நாளும்
இதயம் நனைந்து இன்னுயிர் கரைகின்றாள்......


தன்னுடல் வலிமை குறைந்து விட்டாலும்
தன்னக வலிமையில் உயிர் வாழ்கின்றாள்
முகத்தில் சருமம் சுருங்கி இருந்தாலும்
அகத்தில் ஆயிரம் நிலவாய் ஒளிர்கிறாள்......

எழுதியவர் : இதயம் விஜய் (17-Jun-17, 11:50 am)
பார்வை : 573

மேலே