மனிதன் ஆணவம்

சந்தனமும் அகிலும்
மர கட்டைகளே
இவை எரித்தால்
தருவதோ நறுமணம்
தெய்வமணம் வான்
முட்டி நிரம்பும்
அரு மணம்

ஆனால் இந்த கட்டை
மானிட கட்டை
மண்ணில் சாய்ந்திட
எரித்தால் தருவது
தொல்லை தரும்
துர் நாற்றம் -இது ஏன்
என்றால் அவனோடு
கடைசிவரை தங்கிவிடும்
அவன் அடங்கா ஆணவம்
எரித்தால் தரும்
துர் நாற்றம்

அகிலும் சந்தனமும்
எரித்தால் தரும்
நறு மணம்
இறை மணம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jun-17, 6:21 pm)
Tanglish : manithan AANAVAM
பார்வை : 170

மேலே