அகத்தீஸ்வரர் பாடல்-

அகிலம் போற்றும் அகஸ்தீஸ்வரா – எனக்கு
அபயமளிக்கும் ஆனந்தீஸ்வரா
ஆறங்கம் நால்வேதத்தின் நாயகனே
ஆறாத துயர் தீர்க்கும் தூயவனே (அகிலம்)

பெருங்காஞ்சிப் பதியமர்ந்த பேரின்பமே
அருங்காட்சி அளித்தாய் குறுமுனிக்கே
வெண்ணீற்றில் அகமகிழும் ஆதியனே
நன்நீரால் நீராடும் சோதியனே (அகிலம்)

நால்வர் திருப்பாட்டால் நலம்தந்தாய்
நாடி வருவோர்க்கு அருள்தந்தாய்
கோடி இன்பம் தந்தருளும் கைலாசா
உமாசங்கரன் வணங்கிடும் கௌரிசா (அகிலம்)

-----------------
மஹேந்திரவாடி உமாசங்கரன்

எழுதியவர் : (27-Jun-17, 8:08 am)
பார்வை : 38

மேலே