கவலை தீர நீ வேண்டும்

பொன்னொளிரும் ரதமாய் அசைந்து வந்தாய்
நான் அக்கு வேறாகிப் போனேன்
தென்றலில் தவழ்ந்தது உன் சந்தண வாசம்
சிதிலமாய் மாறிப்போனது என் இதயம்

உன்னால் உடைந்ததை நீ தானே ஓட்ட வேண்டும்
உன்னால் பட்ட காயம் உன்னால் தானே தீர வேண்டும்
என்னிதயத்தில் வந்து அமர்ந்து
உன் வைத்தியத்தை இன்றே தொடங்கு
காலம் மெதுவாய்ப் போகட்டும் என் காயம் அதுபோல் ஆறட்டும்

இனியொரு தாக்குதல் இது போன்று எனக்கு இனி வேண்டாம்
உன்னிருப்பிடம் நிரந்தரமாய் அங்கேயே மாறட்டும்
காதல் உலகமே என் கனவுத் திலகமே
கவலை நீக்கும் தாயாக நான் சோர்வு போக்கும் பாயாக
என் வாழ்வு முழுக்க நீ வருவாயா

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (9-Jul-17, 7:16 pm)
பார்வை : 117

புதிய படைப்புகள்

மேலே