பூ என்றேன்

என்னைக்
கவிதையில் சொல் என்றாள்

பூ என்றேன்

ஓரெழுத்து கவிதையா ?
கவிதை வராதா என்றாள்

பூவிற்கு எத்தனை இதழ்கள்
எத்தனை அழகு
எத்தனை வாசம்
பூவின் தேன் எத்தனை இனிமை
எண்ணிப் பார் என்றேன்

மெல்லிய புன்னகைப் பூ ஒன்றை
உதிர்த்து நடந்தாள்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-17, 7:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : poo endren
பார்வை : 70

மேலே