எழுத்து kavithai

மண்ணைத் தழுவி உறுப்பாசி போக்கும்
உழவனின் கலப்பையை ஒத்த
உன்னைத் தழுவி எண்ணப் பசி போக்கும்
கவிஞனின் எழுதுகோலுக்கு உன்னை காணிக்கை ஆக்குகிறேன் .
கவிஞனிடம் அகப்பட்ட நீ ஓர் கவிதை
சிட்பியிடம் அகப்பட்ட நீ கல் சித்திரம்
ஓலைச் சுவடியில் அகப்பட்ட நீ உலகப் பொதுமறை
வினாவில் அகப்பட்ட நீ விடையாக ..........
என் அருகே நீ இருந்தால் எழுதுகோலும் கலைத்துவிடும்
உன் அருகே நான் இருந்தால் செம்மொழியும் சிறந்த்துவிடும்.

எழுதியவர் : (28-Jul-17, 7:29 pm)
சேர்த்தது : kavitha
பார்வை : 46

மேலே