kavitha - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kavitha |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 12 |
புன்னகை
மாலையிட்ட மணாளனிழைத்த துரோகத்தால்
மரித்துப்போனதே அவளிதழிலிருந்த மந்தகாசப்புன்னகை – தன்
மக்களின் நலன்கருதியவள் மயானத்திலிருந்ததை தோண்டியெடுத்து
புத்துயிரூட்டி புதுப்பொலிவேற்றி
நித்தமும் நீரூற்றி காத்திட்டபோதிலும்
நிரந்தரமாய் அவள்புன்னகையில் உயிர்ப்பில்லையே!
என்றுமாறுமிந்த ஈனத்தனம் ஆண்வர்க்கத்திடம் – எந்நாளும்
ஏமாந்துபோக பெண்ணினமென்ன பேதையர் கூட்டமா?
பொறுமைக்குமோர் எல்லையுண்டு என்னினமே
போற்றுதலுக்குரிய பூமாதேவியே அதையிழந்து பிளக்கையில்
தூற்றி வீசியெறி உனை துச்சமாய் எண்ணியவனை
புல்லுருவிபாய்ந்த மரத்தை பூஜிக்காதே என்றும்!
பிள்ளைகள் வாழ்வே பெரிதென்றெண்ணி
சிறுமைபடுத
மண்ணில் விட்டு என்னை
விண்ணை தொட்ட அன்னை......
நான் .....
சுகமாக பிறந்திருந்தால்
சுகப்பட்டு இருப்பாளோ ?
நான் .........
தாமதித்து பிறந்திருந்தால்
அறுவைத்தலும்போடு இருந்திருப்பாளோ ?
அன்னையே !
கோடி முத்தங்களை
ஏன் கன்னங்களில்
கோர்க்க வந்த வேலை
உன் உதடுகள் எங்க
காணாமல் கதறுகிறேன்
வந்தவரை வாழவைக்கும் தமிழகமே ,
நொந்தவனை வாழவிடு .
கோவணமும் அம்மணமாய்
கூவுகிறான் கேட்கலையோ?
இம்மாமண்ணும் அம்மணமாய்
இருந்துவிட பொறுக்குத்தியோ ?
வேர்வையில் விளைந்தவன்
கண்ணீர்போர்வையில்
கிடத்துதியோ ?
காலம் சொல்லும் பதில்வரையும்
கலைத்தவன் போவது உன்னியதியோ?
பெற்றடுக்காத என் அன்னைக்கு-மடியில் தவழும்
நீயும் ஓர் கைக்குழந்தை.
என் அன்னையின் முத்தத்தை உன் கன்னங்களில் வாங்குகிறாய் ,
கடன் கொடுத்தும் என்னை காதலோடு பேசவைக்கிறாய்
நான் களைத்திருக்கும்போது விளையாடச்சொல்கிறாய்
நான் மௌனமாகும்போது செய்தி அனுப்ப சொல்கிறாய்
காதலால் உன்னை நான் உறங்கும் போது
நெஞ்சோடு நெஞ்சாக வைக்கச்சொல்கிறாய்
பகலெல்லாம் என் காதோடு நீ
காதாக இருக்கிறாய் .
நீ மரணத்தின் வாசல் செல்லும் முன்
நான் மடிந்து விடுகிறேன் .
கதிரவன் பிரவேசிக்கும் அவ்வேளை
போர்வைக்குள் சிக்குண்ட என்னை
வெளியேற்ற புலம்புகிறாள் என் அன்னை
இயற்கயே! ஓய்வின்றி இரவும் பகலும்
உண்டாகும் உன்னை எழுப்பிவிட
உன் அன்னையும் இல்லையே ,
அனுதின வேலையை அலுக்காமல் செய்யும்
உன்மீது எனக்கு ஓயாத பொறாமை .
நானும் சோம்பேறி போர்வையை விட்டு
உன் போல் சுகப்பட வேண்டும் என்று........
ஆழம் விழுதென ஆயிரம் உறவுகள் இருந்தென்ன தாயே ஆணி வேராக நீ இருந்தால் ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்திடுவேன்!!
இயற்கை
உணவுகளால்
உரமேறியது
காளைமாடு
செயற்கை
வஸ்துக்களால்
சீரழிந்தது
காளையர்
உடற்கூறு
மெருகேற்றுங்கள்
உடற்கூறை
களம்காணுங்கள்
காளைமாடை.
ஜல்லிக்கட்டு பற்றி கவிதைகள் சமர்ப்பிக்கவும்