இயற்கையே உன் மீது பொறாமை
கதிரவன் பிரவேசிக்கும் அவ்வேளை
போர்வைக்குள் சிக்குண்ட என்னை
வெளியேற்ற புலம்புகிறாள் என் அன்னை
இயற்கயே! ஓய்வின்றி இரவும் பகலும்
உண்டாகும் உன்னை எழுப்பிவிட
உன் அன்னையும் இல்லையே ,
அனுதின வேலையை அலுக்காமல் செய்யும்
உன்மீது எனக்கு ஓயாத பொறாமை .
நானும் சோம்பேறி போர்வையை விட்டு
உன் போல் சுகப்பட வேண்டும் என்று........