மஞ்சள் கையிறுடன் நான்

தூரலும் தோற்றுப் போனது
அவள் கூந்தல் துவட்ட!

கண்டாங்கிச் சீலையில்
கண்கள் காணாத அழகி~அவள்!

வெண் மேகம் கருத்தாலும்
அவள் வெண்மை மனசுக் கருக்காது!

தூசுப் படிந்த என் கண்களுக்கு
உதட்டு வழியில் உயிர் தந்தவள்!

மனதை வருடும் அவள் சிரிப்பு
தூரலிடும் தூவானம்!

மெண்மையாகத் தரையில் ~முத்தமிடும்
அவள் கால் கொலுசு இசை!

வலவி ஓசையில் காதல் சமிஞ்சைகள்
தருவாள்!

தென்றலாகச் சத்தமிடுவாள்
சிறுத் தவறுகள் செய்தால் ~நாவின்
நுனிக் கடித்து!

மண்ணுக்கும் வலிகள் இல்லை
அவள் மெண்மைப் பாதங்கள் வரைந்த
பாதச் சுவடுகள் சொல்லும்!

ஒவ்வொரு நினைவுகளும்
அழகாகக் கோலமிடும்
என் இதய வாசலில் அவள்~காதல்
ஆசைகள்!

அவள் வரவை நோக்கும்~நான்
மஞ்சள் கையிறு கனவுகளோடு!

அன்புடன்
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (30-Jul-17, 7:16 am)
பார்வை : 201

மேலே