உனக்காக

கற்பனையில் உனக்கொரு
உருவம் கொடுத்து பாா்க்கின்றேன்
உருகி உருகி உனக்காக
உதிரம் வெளுத்து சாகின்றேன்
இல்லாத உன் நிஜமோ
என் நெஞ்சை வதைக்கிறது
ஏங்கி ஏங்கி என் நிழலும்
எனக்குள்ளே கரைகிறது
ஈரக்காற்று பட்டாலும்
என் மேனி எாிகிறது
ஏகாந்த இரவும்
எனை ஏனோ சுடுகிறது
போதுமென்று உன் நினைவைத்
துாக்கிப்போட முடியவில்லை
பொத்திவைத்த ஆசைகளோ
எனைத்துாங்க விடுவதில்லை
பருவம் வந்த நாள் முதலாய்
சோ்த்து வைத்த உன்நினைவு
பாதியிலே போய்விடுமோ
பாவை நான் உனை காணும் முன்னே.

எழுதியவர் : பிாியா (2-Aug-17, 4:43 pm)
Tanglish : unakaaga
பார்வை : 293

மேலே