சுதந்திரம்

சுதந்திர மண்ணில் வாழ்வதில்
இல்லையே மகிழ்வு...
வெள்ளையன் ஆட்சியில்
இல்லையே நிம்மதி...
சுய ஆட்சியில் இல்லையே
நிதி...
அன்று போனது களவு
நம் உழைப்பு...
இன்று போனது களவு
நம் உடைமை...
அன்று வெள்ளையன் செய்தான்
ஆட்சி கொடுமை படுத்தி...
இன்று செய்கிறான் ஆட்சி நம்மை
அடிமை படுத்தி...
அன்று நம் குடுமி அவன் கையில்...
இன்று நம் தோள் அவன் காலில்...
எது சுதந்திரம்...
சிந்தனை செய்தால்...
வாணிபம் என்ற யுக்தியால் நம்மை
ஆட்சி செய்கிறான்...

எழுதியவர் : பவநி (16-Aug-17, 2:15 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 59

மேலே