ஆண்களின் மனம்

தன் நிழலையும் சந்தேகிக்கும் புத்தியுள்ள ஜீவனொன்று உண்டெனில் அப்பெருமை ஆண்களுக்குரியதே...

தனது கணவன் தன்னை சந்தேகிக்கிறானென்று மிகச்சுலபமாகக் கண்டுபித்துவிடுகிறது பெண்களின் மனம்...

பெண்களின் மனதை அறிய முற்படும் முன் இந்த ஆண்களின் மனதைக் கொஞ்சம் அறிந்து பார்ப்போமே...

மாயையை அழகென்றுரைக்கும்...
மயங்கிப் பின்னாலே போகும்...
அருகில் இருக்கும் அன்பை அறியாது...
என்றும் ஆதிக்கம் செலுத்தவே நினைக்கும்...
நிலையற்றது...

பெண்மையை உடல் ஆசைக்காக நாடும்...
தன் உணர்வுகளை முன் நிறுத்தியே சிந்திக்கும்...
முன் சொன்னாற்போலே சந்தேகப் பிராணி...

சந்தேகத்தை வார்த்தைகளாய் பிரதிபலிக்கும்...
கிட்டாததை எண்ணி ஏங்கும்...
அசுத்தமானதாக இருக்கும் சந்தேகம் குடியேறியதாலே...
சந்தேகத்திலிருந்து பயம் பற்றிக் கொள்ள,
பித்துபிடித்த வாழ்வு,
பல ஆண்களின் வாழ்வு...
கடைசியா ஒன்றைச் சொல்ல மறந்துட்டேன்!

ஆம்.
இதைப்படிக்கும் ஆண்களின் மனம் என்மீது கோபமும், வெறுப்பும் கொள்ளும்...
எல்லா ஆண்களும் அப்படி இல்லையென்று ஆணாதிக்கத்திற்காக வக்காளத்தும் வாங்கும் கருத்தென்ற பெயரில்...
இதோ தெரிகிறதே!
உங்கள் கோபம்...

சிந்திப்பதற்காகத் தீட்டப்பட்டவை இவை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Aug-17, 6:57 pm)
Tanglish : aangalin manam
பார்வை : 6295

மேலே